கடலூர், பிப். 11- பணி நிரந்தரம் செய்யக் கோரி என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இவர் கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பேச்சு வார்த்தைக்கு என்எல்சி நிறுவனம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் அனைத்து ஒப் பந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்க ளான சிஐடியூ, தொமுச நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் காலதாமதம் ஏற்படு வதால் திங்களன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் என்எல்சி நிறுவனக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு சுற்றுகள் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், என்எல்சி குழுவினர் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். இதையடுத்து ஒப்பந் தத் தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகக் கூறினர். இந்நிலையில், என்எல்சி இந்தியா நிறுவன தரப்பிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் 303 ஒப்பந் தத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய் யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.130 முதல் ரூ.158 வரை ஊதிய உயர்வு வழங்குவதாகவும் தெரி விக்கப்பட்டிருந்ததாம். பேச்சு வார்த்தையின்போது என்எல்சி குழுவினர் தரப்பில் 10 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலை யில், நிர்வாகத்தின் குறுஞ்செய்தியை பார்த்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிச்சியடைந்தனர். எனவே, குறுஞ்செய்தி தகவலை வாபஸ் பெற வலியுறுத்தி, தொழிற்சங்கக் கூட்ட மைப்பு நிர்வாகிகள் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் என்எல்சி நிறு வனத்தின் தலைமை அலுவலகம் வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் என்எல்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த லாம் என நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த போராட் டத்தில் அனைத்து சங்கங்களின் தலை வர்களும் கலந்து கொண்டனர்.