சிதம்பரம், பிப்.23- தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசி யல் கட்சியினர் பொதுநல அமைப்புகள் சார்பில் சிதம் பரம் அருகே பரங்கிப் பேட்டையில் 1000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் சவப் பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர். சவப்பெட்டியை கையில் ஏந்திக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக கண்டன முழக்கமிட்டுச் சென்றனர். திமுக நகரச் செய லாளர் முனைவர் உசேன், அனைத்து ஜமாத் நிர் வாகிகள், இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப் புகள் என அனைவரும் கலந்து கொண்டனர் பரங்கிப்பேட்டை முழுவ தும் பதட்டமாக இருந்த தால் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலை மையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டனர்.