புவனகிரி ஊராட்சி ஒன்றியம் லால்புரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றியக்குழுத் தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் நடனமயிலோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.