கடலூர், மார்ச் 1 டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறை கேட்டில் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு தொடர்பு இல்லையா என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கேள்வி எழுப்பினார். கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வந்துவிட்டார், இனி இந்தியாவில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று இந்திய ஊடகங்களும், பத்திரிகைகளும் ஊதித் தள்ளி னார்கள். இதுவரை எட்டு முறை அமெரிக்க அதிபரும் மோடியும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தியா விற்கு என்ன லாபம் கிடைத்தது என்று கேள்வி கேட்டால் அதை பற்றி பேச மறுக்கின்றனர்.
இந்தியாவுக்கு நட்டமே
ரூ.20,000 கோடி அளவில் ராணுவ தளவாடங்களை விற்பதற்கு தான் அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வந்தார். அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்களை வாங்கும்போது நம்முடைய இந்திய தொழிற்சாலை கள் மூடப்படும். அதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழக்கும் நிலை இருக்கும். இதனால் இந்தியா விற்கு நஷ்டமே தவிர லாபம் கிடையாது.
90 லட்சம் வேலை இழப்பு
கடந்த ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரம் தெரி விக்கிறது. இந்திய அரசு, விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதையே, அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் மூலம் எதிர்த்து வருகிறது. எம்எஸ் சாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென்று நாம் போராடினால், அதை அவர்கள் எதிர்க்கிறார்கள். மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக சரிந்துள்ளது.
நிதி பாக்கி
மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி உதவித்தொகையில் மட்டும் 1900 கோடி ரூபாய் இதுவரையில் தரவில்லை. இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 4023 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பங்கை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வில்லை. உள்ளாட்சி அமைப்பு களுக்கு வழங்கப்படுகின்ற மானியமும் குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்படி மத்திய அரசு தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை.
அமைச்சருக்கு தொடர்பில்லையா?
டிஎன்பிஎஸ்சி தேர்விலும், நியமனத்திலும் முறைகேடு மிகப்பெரிய அளவில் நடைபெற்று உள்ளது. இந்த முறைகேடுகளில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இல்லாமல் எப்படி நடந்தி ருக்கும், உழைத்து படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையில் ஊழல் பேர்வழிகள் அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்த்தப்பட்டு ள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்தில் ஊழல்தான் அதிகரிக்கும். இவ்வாறு அவர்பேசினார். பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகர் குழு உறுப்பினர் கே.ஸ்டாலின், வரவேற்றார், நகர் குழு உறுப்பினர்கள் எம்.பழனி, எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருத வாணன், வி.உதயகுமார், பி.கருப்பை யன்,வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், கடலூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம் நெல்லிக்குப்பம் செயலாளர் ஜெயபாண்டியன், பண்ருட்டி நகர செயலாளர் உத்தராபதி உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.