விருதாச்சலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோவில் கைதான பள்ளி நிர்வாகி பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் 5 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வைத்திய லிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் நிர்வாகி பக்கிரிசாமி என்பவர் மீது தற்போது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
இவர் திமுக வில் கவுன்சிலராக இருந்துள்ளார் பிறகு பாலியல் புகாரில் சிக்கியதையடுத்து கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.