கடலூர், ஜூன் 30 - நுண்கடன் வலையில் சிக்கியுள்ள பெண் களை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் நுண் நிதி நிறு வனங்களான கிராம விடியல், லொக் சமஸ்தா, கோமாதா, தின லஷ்மி குழு, எக்விடாஸ், மதுரா, எச்டிஎப்சி, ஐடிஎப்சி, சூரி யோதை, ஈசப், எல்என்டி, ஆசிர்வாதம், முத்துட் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், முத்து பின்கார்ப், கிராம சக்தி, ஸ்மைல், பவ்டா, நூடுல்ஸ், பென்சில், சாட்டின், உஜ்ஜி வன், பஜாஜ் பைனான்ஸ் என 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காட்டுமன்னார்குடி, திருமுட்டம், சிதம்பரம், குமராட்சி, கீரப் பாளையம், பரங்கிப்பேட்டை, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் நகரம், கடலூர் ஒன்றி யம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன. இந்த நுண்நிதி நிறுவவனங்கள் குறைந்த வட்டிக்கு கடன் என்ற பெயரில், சுய உதவிக் குழுக்களின் வாயிலாக பெண்களுக்கு கடன் வழங்குகின்றன.
கடனை வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை வட்டியுடன் செலுத்த வேண்டும். தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் கடந்த 3 மாதங்க ளாக பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள் ளனர். இந்த சூழலில் வட்டியோடு கடனை செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவ னங்களை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கே சென்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் வீடுகளில் குடும்ப வன்முறையும் நிகழ்கிறது. கடனை செலுத்த முடியாமல் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சுய உதவி குழுக்களின் கடன்களை ஆகஸ்ட் 31 வரை கேட்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் கடனை வசூலிக்கும் நிறுவனங்களை, மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச வேண்டும். கடன் வசூலிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். இந்நிறுவனங்களின் அத்துமீறல் கள் குறித்த புகார்களை விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து, அவரது செல்போன் எண்ணை விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யருக்கு விரிவான மனுவும் அளிக்கப் பட்டுள்ளது.