கடலூர், ஆக.6- தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை யைப் பயன்படுத்தி வந்தவர்கள் 24 வலை களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்த தோடு தங்களுக்கு மாற்று வழிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிரா மங்களில் சுமார் 40 ஆயிரம் பேர் மீன்பிடி சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். 250 மீன்பிடி விசைப் படகுகளும், 2,950 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப் படகு களும், 868 நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழி லில் ஈடுபடுத்தப்படுகிறது. இதில் சிலர் மீன்வ ளத்தை அழிக்கும் வகையில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வருவ தால் மற்ற மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவ தாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசால் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பதை தடை செய்து 2000ஆம் ஆண்டு ஆணை வழங்கப்பட்டது. எனினும் மாவட் டத்தில் சுருக்குமடி வலையை சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் மீன வர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொலை நிகழ்கின்றன.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வா கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட தோடு, சுருக்குமடி வலை பயன்பாட்டினை கைவிட்டால் மாற்று வாழ்வாதாரத் திட்டங் கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டது. இதற்கு உடனடி பலனாக பல்வேறு கிராமத்தினர் சுருக்குமடி வலை பயன்பாட் டினை கைவிடுவதாக அறிவித்தனர். அதன்படி கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 33 மீனவர் கிராமத்தினர் தங்களது கிராமத்தில் பயன் பாட்டிலுள்ள 24 சுருக்குமடி வலைகளை ஒப்ப டைப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் வழங்கினர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களில் உள்ள சுருக்குவலை படகுகளில் முதற்கட்ட மாக ரூ 6.65 கோடி மதிப்பிலான 19 சுருக்கு வலை படகுகள் (ஒரு படகின் தோராய மதிப்பு ரூ 35 லட்சம்), மற்றும் ரூ. 7.20 கோடி மதிப்பி லான 24 சுருக்குமடி வலைகளையும் (ஒரு சுருக்குமடி வலையின் தோராய மதிப்பு ரூ 30 லட்சம்) ஒப்படைத்துள்ளனர்.
இவர்களுக்கு அரசு அறிவித்துள்ள மாற்று திட்டத்தில் ஏதேனும் ஒன்று வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார். சுருக்குமடி வலையை ஒப்படைத்த மீனவ கிராமத்தினர் கூறுகையில், தற்போது பயன் பாட்டிலுள்ள மற்ற சுருக்குமடி வலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மற்ற மீனவர்கள் மிரட்டப்படுவதை தடுக்க வேண்டும். வலைகளை ஒப்படைத்த மீனவர்க ளுக்கு மாற்று வாழ்வாதாரமாக செவுள் வலை படகு அல்லது இழுவலை படகாக மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்றனர். இதில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆர்.ரம்யா லட்சுமி, ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.