tamilnadu

img

காட்டு மன்னார் கோவில் அருகே பட்டாசு ஆலை விபத்து - 9பேர் பலி

காட்டு மன்னார் கோவில்  அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து வெடிவிபத்து ஏற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.