tamilnadu

கடலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

கடலூர், ஜூலை 27- மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற  வலியுறுத்தி கடலூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் பழனி தலை மையில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு  கொண்டு வந்துள்ள மின்சார  சட்ட திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற  வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து  செய்ய வேண்டும், மின்சாரத் துறையை தனி யார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கடலூர் குப்பன் குளத்தில் விவசாயிகள் வாயிலுள்ள மின்சார மோட்டாருக்கு மாலை  அணிவித்தும், சங்கு ஊதியும்,  கருப்பு கொடி  ஏந்தி நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்  பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாய நிலத்தில் இறங்கி கருப்பு  கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன்,  வாலி பர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ்.தமிழ்மணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;