கடலூர், ஜூன் 11- நான்கு வழிச்சாலைப்பணிக்காக விவசாயம் நிலம் கையகப்படுத்து வதை எதிர்த்து சமாதான கூட்டத்தி லிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சென்னை-கன்னியாகுமரி தொழில்நுட்ப சாலைத்திட்டத்தின் கீழ் கடலூர் முதல் மடப்பட்டு வரை இருவழிச் சாலையை 4 வழிச் சாலை யாக மேம்படுத்தும் பணி நடக்க வுள்ளது. இதற்காக நெல்லிக்குப் பம் நகரம், வரக்கால்பட்டு, வெள்ளப்பாக்கம், செஞ்சிகுமார புரம், கீழ்கவரப்பட்டு கிராமங்களில் புறவழிச் சாலை அமைக்க விவசாயி களின் நிலம் கையகப்படுத்த உள்ள தாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விவ சாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாலை விரிவாக்கப் பணிக்காக விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணிகள் துவங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு பல முறை மனு அளித்துள்ளனர். இதன் அடிப் படையில் திங்களன்று(ஜூன்10) கட லூர் சாராட்சியர் கே.எம்.சரயூ தலை மையில் சமாதான கூட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், நகரச் செய லாளர் ந.ராமானுஜம், ஆர்.சம்பத் குமார், சகா.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களது விளை நிலத்தில் அள வீடு செய்யக் கூடாது. பாதிக்கப்படும் அனைத்து விவசாயிக ளையும் அழைத்து கருத்துக் கேட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டுமென விவசாய பிரதிநிதிகள் தரப்பில் வலி யுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த அரசு அதி காரிகள், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதித்தர வேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் சென்று முடிவெடுப் பதாக தெரிவித்தனர். மோட்டார் பாசனம் மூலம் மூன்று போகமும் விளையக்கூடிய விவசாய நிலகளை சாலைப்பணிக்கு கையகப் படுத்தக்கூடாது என்றும், விவசாய நிலம் பாதிக்கப்படாத வகையில் மாற்று பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் விவ சாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி னர். தொடர்ந்து பல்வேறு பிரச்சனை களின் அடிப்படையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விவ சாயிகள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர், சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோ.மாதவன் கூறு கையில், “கடலூரிலிருந்து மடப்பட்டு மார்க்கமாக (கடலூர்-பாலூர்-பண் ருட்டி சாலை), (கடலூர்-நெல்லிக் குப்பம்-பண்ருட்டி சாலை) (தென் பெண்ணை யாற்றில் அமைக்கப் பட்டுள்ள சுங்கச் சாலை) ஆகிய மூன்று சாலைகள் உள்ள நிலையில் விவசாய நிலங்களை அழித்து நான்கா வதாக ஒரு சாலை தேவை யில்லை. அப்படி மேம்படுத்த வேண்டுமென்றால் சுங்கச் சாலையை மேம்படுத்தலாம். விவ சாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்தால் விவசாய குடும்பங் கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும் என்பதால் திரும்ப பெற வேண்டும்” என்றார். ந.ராமானுஜம் கூறுகையில்,“ இரு வழிச் சாலையை 4 வழிச் சாலை யாக மாற்றுவதாக கூறுவதே பொய்யான தகவலாகும். ஏனெனில் கீழ்கவரப்பட்டு முதல் மருதாடு வரை யில் சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு முப்போகம் விளையக் கூடிய விவ சாய நிலத்தில் சாலை அமைப்பதால் சுமார் 1500 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்”என்றார்.