tamilnadu

டி.கே.ரங்கராஜன் எம்.பி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கடலூர், ஜூன் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வி.தொ.ச வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. ஏழுமலை பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. பண்ருட்டி ஒன்றியம் ராயர்பாளையம் ஊராட்சிக்கு 2014 - 15 நிதி யாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்க ளுக்கு கடிதம் கொடுத்துள்ளார். இந்த நிதியில் சமுதாயக்கூடம், பயணியர் நிழற்குடை மற்றும் கருமகாரி யம் மண்டபங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் தலித் பகுதிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கருமகாரியம் மண்டபம் அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆறு மாத காலமாகியும் அந்த பணி நிறைவடையாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயனியர் நிழற்குடைக்கு சூரிய மின்விளக்கு அமைக்க ப்பட்டது. அதில் 60 வோல்ட் பேட்டரி பொருத்த ப்பட்டதால் பல்புகள் எரியவில்லை. 100 வோல்ட் பொருத்துவதாக கூறி பேட்டரியை ஒப்பந்ததாரர் கழற்றிச் சென்றார். ஆனால் இதுவரை புதிய பேட்டரி  பொருத்தப்படவில்லை.  அதே போல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சமுதாயக்கூடப் பணியும் இன்னும் முழுமை பெறவில்லை. இதில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திட வேண்டும். மேலும் கழி வறைக்கு வைக்கப்பட்டுள்ள கதவுகள் கழற்றப்பட்டும், பூட்டுகள் இல்லாமலும் திறந்தே கிடக்கின்றன. இவற்றையெல்லாம் சரி செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.