tamilnadu

img

சிறையில் வியாபாரி மரணம்... சிபிசிஐடி விசாரணை...

கடலூர்:
விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (39). முந்திரி வியாபாரி. இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கபட்டிருந்தார்.
கடந்த 4 ஆம் தேதி இரவு செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக ஊறிய காவல்துறையினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் பரிதாபமாக இறந்தார்.காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதில் மரணமடைந்தார். ஆனால் இதை மூடி மறைக்க வழக்கம்போல் காவல்துறையினர் பல்வேறு கட்டுக் கதைகளை கூறினர்.

செல்வ முருகனின் மரணத்திற்கு காரணமான போலீசாரை கைது செய்யும் வேண்டும். அதுவரை இறந்த செல்வமுருகனின் உடலை வாங்க மாட்டோம் எனகூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டது.உள்ளூர் காவல்துறை விசாரணை செய்தால் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதனையடுத்து இந்த வழக்கை கடலூர் மாவட்ட சிபிஐடி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை தீவிரபடுத்தும் விதமாக சிபிசிஐடி துணைபோலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் தலைமையில் விசாரணை தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் சொந்த ஊரான காடாம்புலியூரில் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தற்போது வசித்து வந்த வடக்குத்து பகுதியிலும், அவரை கைது செய்த நெய்வேலி நகர காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.அதனைத்தொடர்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆம் தேதி பணியில் இருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் கிளை சிறை போலீசார் மற்றும் செல்வமுருகனுடன் இருந்த கைதிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வமுருகனின் மனைவி கூறுகையில் எனது கணவர் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மனுதொடர்பாக வருகிற 18 ஆம்  விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணை முடிவை பொறுத்தே நான் எனது கணவரின் உடலை வாங்குவேன். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றார்.