கடலூரில் வெங்காயம் கிலோ ரூ.10க்கு விற்பனை
கடலூர், டிச. 11- கடலூரில் வெங்காயத்திற்கான விலையை குறைத்து விற்பனை செய்வதில் போட்டி ஏற்பட்டு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பெல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயங்கள் கடந்த சில நாட்களாகவே கடுமையான விலை உயர்வினை சந்தித்து வருகிறது. கடலூரில் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.130 வரையில் விற்பனையான நிலையில் சாம்பார் வெங்காயம் ரூ.180 வரையில் விற்பனையானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று திருப்பாதிரிபுலியூர் பான்பரி சந்தையில் கடை நடத்தி வரும் எஸ்.கே.பக்கிரான் அதிரடி யாக ரூ.100-க்கு 4 கிலோ பெல்லாரி வெங்காயத்தை விற்பனை செய்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், மற்ற வியாபாரிகளுக்கு கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். கர்நாடக மாநிலம் பெங்க ளூருவிலிருந்து குறைந்த விலைக்கு வெங்காயம் கிடைப்பதாகவும் அதனை விற்பனை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமையன்று பக்கிரான் ரூ.100-க்கு 5 கிலோ வெங்காயத்தை வழங்கினார். இதனால், அவரது கடையில் கூட்டம் அலை மோதியது. இதனால், ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டரை கிலோ மட்டுமே வழங்கினார். அதுவும் காலைக்குள் விற்றுத் தீர்ந்தது. இதற்கி டையில், செவ்வாய்க்கிழமையன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்தார். இதனால், ஒரே நாளில் தரமான வெங்காயம் ரூ.10 விலை குறைந்தது. வெங்காயம் விலைக்குறைப்பு பரபரப்பு அடங்குவதற்குள் கடலூர் முதுநகரில் உள்ள பக்தவச்சலம் சந்தையில் வேலு என்பவர் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10-க்கு விற்பனை செய்தார். இத்தகவலறிந்த பொது மக்கள் அங்கு விரைந்ததால் சிறிது நேரத்தில் 25 மூட்டை வெங்கா யத்தை விற்றுத் தீர்த்தார். இந்த சந்தையானது கடலூர்-சிதம்பரம் சாலையில் அமைந்துள்ளதால் அதிகமான மக்கள் நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் விலையேற்றம் காணப்படும் நிலையில் கடலூரில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைத்து வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் மனைவியை எரித்துக் கொன்ற ஆசிரியர் கைது
விழுப்புரம், டிச.11- விழுப்புரம் சுதாகர் நகர், கரிகாலன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (60). இவர் திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது முதல் மனைவி இந்திரா (56), நடராஜன் முதல் மனைவி இருக்க திருக்கோவிலூரைச் சேர்ந்த லீலா என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். லீலாவுக்கு வேலாயுதம் (23) என்ற மகன் உள்ளார்.நடராஜனின் முதல் மனைவி இந்திரா, விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். அதோடு வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி காலை இந்திரா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காவல்துறை யின் சந்தேகப்பார்வை இந்திராவின் கணவர் நடராஜன் மீது விழுந்தது. அவருக்கும் இந்திராவுக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனால் நடராஜனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில், குடும்பத் தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதில் இந்திரா இறந்ததால் தன்மீது சந்தேகம் வராமல் இருக்க அவரது உடல் மீது துணிகளை போட்டு தீவைத்து விட்டு தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லாதது போல நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நடராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.