tamilnadu

கடலூர்,வேலூர், மதுரை முக்கிய செய்திகள்

சிறுமிகள் உள்பட 4 பெண்களுக்கு டெங்கு
கடலூர், நவ.9- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில், தீவிர காய்ச்ச லால் பாதிக்கப்படுவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்டுகிறது. அதன்படி, 72 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தனர். இதில் 4 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  நெல்லிக்குப்பம் முகமதுஜமால் மகள் ஷமீம்பானு (5),  பண்ருட்டி வீரபெருமாநல்லூர் பழனி மகள் மோகனா (20), பேர்பெரியான் குப்பம் கதிர்வேல் மகள் ஞானகீர்த்திகா (5), மனம்தவிழ்ந்தபுத்தூர் மணவாளன் மனைவி அருள்மொழி (26) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரி விக்கையில், “மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சராசரியாக தினமும் 2500 பேர் வரைக்கும் புறநோயா ளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் தொடர்ந்து காய்ச்சல் இருப்பவர்களாக கண்டறியப் படும் சுமார் 100 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதில் 4 முதல் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இது மிகப்பெரிய அபாய அளவு கிடையாது. மேலும், குறிப்பிட்ட பகுதியிலிருந்து மொத்தமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் மட்டுமே கவலைக்குரியது” என்றனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் 
வேலூர், நவ. 9- வேலூர் மாவட்டத்தில் 10 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட  ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி, வேலூர் கோட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராகவும் அங்கு பணியாற்றி வந்த அப்துல்  கரீம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சௌந்தர்ராஜ், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், நெமிலி வட்டார  கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஆட்சியர்  அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அஞ்சலி, திமிரி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திமிரி வட்டார கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, திமிரி வட்டார  வளர்ச்சி அலுவலராகவும், கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, கே வி குப்பம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கே வி குப்பம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி  அலுவலர் ஹேமலதா, பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பேரணாம்பட்டு கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, குடியாத்தம் கிராம ஊராட்சி வட்டார  வளர்ச்சி அலுவலராகவும், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்குழாய்க் கிணறு மரணங்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு
மதுரை, நவ.9- மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை பீபீகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆழ்குழாய் கிணறுக்குள் மூடப்பட்ட குடையாக தலை கீழாக செலுத்தப்படும் இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு  பொம்மையை சேதமேதுமின்றி வெளியே எடுக்கும் செயல் முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார். தலைகீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய  குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையை கடந்து சென்ற பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிப்ப துபோல் விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடை கிறது. இதை உருவாக்கியுள்ள மதுரை அப்துல் ரசாக், ஏற்கனவே  இதுபோல் மேலும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.