tamilnadu

கடலூர், திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

வேலையிழந்து தவிக்கும் கைத்தறி தொழிலாளர்கள்: நிவாரணம் வழங்க கோரிக்கை
கடலூர், டிச.4- கன மழையால் வேலையிழந்து தவிக்கும் கைத்தறி நெசவாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.  கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவுபட்டரை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆளவந்தார், செயலாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, பொருளாளர் இ.தயாளன் ஆரியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.  கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கைத்தறி தொழில் மற்றும் அதை சார்ந்துள்ள கைத்தறி நெசவு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கைத்தறி குழிகளில் தண்மீர் தேங்கி உள்ளதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலையிழந்து தவித்து வருகின்றனர்.  நடூவிரப்பட்டு, சிஎன்.பாளையம், சான்றோர்பாளையம், மனக்குப்பம், பச்சையாங்குப்பம், காரைக்காடு, மீனாட்சிப்பேட்டை, வண்டிப்பாளையம், குறிச்சஞ்ப்பாடி, கே.என்.பேட்டை, புவனகிரி, புதுப்பேட்டை, பண்டரக்கோட்டை, அங்குசெட்டிபாளையம், காரைக்காடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், கைத்தறி உபகரனங்களும் வழங்கிட வேண்டும் என அந்த ணனுவில் கூறப்பட்டுள்ளது.

சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
திருவண்ணாமலை, டிச. 4- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொடர்  மழையால் மண்சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பா ளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அப்பகுதியில் உள்ள  சுமை தூக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் என்பரது வீட்டின்  சுவர் மழை நீரால் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் அவரது மகன் ராஜதுரை (23) என்பவர் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். செவ்வாய் அன்று ராஜதுரை மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பின்புறம் சென்ற போது, எதிர்பாராத விதமாக மழை நீரால் சேதமடைந்திருந்த வீட்டின்  மண் சுவர் அவர் மீது இடிந்து விழுந்துள்ளது. சுவர் விழும்  சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து, இடிந்த மண்சுவர்  களை அகற்றிவிட்டு ராஜதுரையை மீட்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய ராஜதுரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து புதுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் ராஜதுரையின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து புதுப்பாளையம் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு  வருகின்றனர்.

தீபவிழா: டிச.10 உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை,டிச.4- தீபவிழாவையொட்டி, டிசம்பர் 10 ஆம் தேதி திருவண்ணா மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தீபவிழா டிசம்பர் 10 ஆம்  தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.  அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள தமிழக அரசின் ஆளுகைக்கு உள்பட்டு இயங்கும்  அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (தேர்வு களுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சார்புடைய நிறு வனங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.