tamilnadu

சிதம்பரத்தில் கொரோனா நோயளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வர முயற்சி

சிதம்பரம், மே 9- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டள்ள வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தினசரி மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. அந்த  உணவு தரமாக இல்லை என்றும், மிகவும் குறைவாகத் தருவதாகவும் நோயாளிகள் குற்றச்சாட்டுகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் புகார் கூறியுள்ளனர். ஆனால் நிர்வாகம் நட வடிக்கை எடுக்காததால் சனிக்கிழமையன்று (மே 9) நோயாளிகள் உண்ணாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர். நிர்வாகம் தரப்பில் எவ்வித பதிலும் இல்லாத்தால், நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்தனர். இதனை அறிந்து சிதம் பரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் சண்மு கம் ஆகியோர் நோயாளி களிடம் அனைத்து வசதி களையும் செய்து கொடுப்ப தாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் மருத்துவ மனையில் உணவு வழங்கும்  ஒப்பந்ததாரை அழைத்து  சரியான முறையில் உணவு களை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்.