சிதம்பரம், மே 28- கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி களில் சிதம்பரம் நகராட்சி சிறப்பு நிலை நக ராட்சியாகும். இது 33 வார்டுகளை உள்ளடக்கி யது. இங்கு கடந்த 1965ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட பாதாள சாக்கடை சீர் செய்ய முடியாத அளவிற்கு முற்றிலுமாக சிதில மடைந்து விட்டது. இதனால் சிதம்பரம் நகரின் கழிவுநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கமாக கடந்த 2014ஆம் ஆண்டு 75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற அரசு ஆணை பிறப்பித்தது. இந்த சாக்கடை திட்டம் எதிர்காலத்தில் 91,000 மக்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இந்த புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளை வியாழனன்று (மே 28) துவக்கி வைத்தார் சிதம்பரம் அருகே மணலூர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், சார் ஆட்சியர் விசுமஹாஜன், நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, வட்டாட்சியர் ஹரிதாஸ், கடலூர் மாவட்ட குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி நிர்வாக செயற்பொறியாளர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் சிதம்பரம் நகர் மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த பவுசியாபேகம் இருந்த போது புதிய பாதள சாக்கடை திட்டத்திற்கு முதலில் ரூ 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதும், பின்னர் அது 75.62 கோடியாக மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.