சிதம்பரம், பிப். 24- கடலூர் மாவட்டம் சிதம் பரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இரு சக்கர வாகன தொடர் ஊர்வலம் மற்றும் காணொளி ஊர்தியை சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். சாராட்சியர் விசும ஹாஜன் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். அதனை சங் கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பிரையோன் பெற்றுக் கொண்டார். ஜூனி யர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளி களின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இத னைத்தொடர்ந்து பொது மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளை காணொளிக் காட்சி மூலம் விளக்கி காண்பிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் நின்று பார்த்துச் சென்றனர்.