சிதம்பரம், அக். 28- மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறை வாக உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது அதிக விபத்து ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. விபத்தில் இவர்கள் பாதிக்கபடுவதோடு இவர்க ளுக்கு எதிரிலும், அருகிலும் இருசக்கர வாக னத்தில் வருபவர்கள் அதிகம் விபத்தால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாணவர்கள் 18 வயது வரை இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் சைக்கிள் ஓட்டவேண்டும் என்றும் சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டையில் தருமம் செய்வோம் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் திறளாக கலந்து கொண்டு 18 வயதுக்கு மேல்தான் இருசக்கரவாகனத்தை தலைக்கவசம் அணிந்து ஓட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பரங்கிப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.