tamilnadu

ஏடிஎம் கொள்ளை முயற்சி தப்பியது ரூ. 26 லட்சம்

 கடலூர், அக். 29- கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஏடிஎம் கொள்ளை யடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் 26 லட்சம் ரூபாய் பணம் தப்பியது. ஸ்ரீராம் நகரில் இயங்கி வரும் கனரா வங்கிக்கு அருகி லேயே அதன் ஏ.டி.எம். உள்ளது. இந்தநிலையில் வழக்கம்  போல் காலையில் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள், ஏடிஎம் மையத்துக்கு வெளியே மிளகாய் பொடி சிதறி  கிடந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றுபார்த்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு முகமுடி அணிந்து வந்த மர்மநபர், ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்ததும், இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கமுடியாததால் திரும்பிச் சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. காவல்துறையிடம் சிக்காமல் இருக்க மிளகாய்பொடி தூவிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த திட்டக்குடி காவல்துறையினர், கொள்ளை முயற்சி  பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.