புவனேஸ்வரம், மே 24-வகுப்புவாத அரசியலின் வெற்றிக்கு நடுவிலும் ஒடிசா மாநிலத்தின் போராட்ட பூமியான போனாய் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமண் முண்டா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.சுரங்கம் மற்றும் இரும்பு தொழிற்சாலை தொடங்க போஸ்கோ கம்பெனிக்கு மூன்றாயிரம் ஹெக்டேர் வனநிலத்தை வழங்கும் முயற்சிக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடந்த பகுதிபோனாய். அந்த போராட்டங்களின் முன் வரிசையில் இடம்பெற்றவர் லட்சுமண் முண்டா.பழங்குடி தனி தொகுதியானபோனாயில் 60 சதவிகித்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். ஆளும் கட்சியான பிஜுஜனதாதளத்தின் வேட்பாளர்ரஞ்சித் கிஷானை 11,594 வாக்குகள் வித்தியாசத்தில் லட்சுமணன் முண்டா தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிடவில்லை. மூன்றாவது இடத்தை பாஜகபிடித்தது. லட்சுமணன் முண்டா இதே தொகுதியிலிருந்து 2004, 2014 தேர்தல்களிலும் முண்டா வெற்றி பெற்றார்.மலைவாழ் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ள முண்டா, தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து முதலமைச்சரின் வீடு முன்பு நடத்தியஉண்ணாவிரதம் அனைவரதுகவனத்தையும் ஈர்த்தது. மேலும் நான்கு தொகுதிகளில் சிபிஎம் போட்டியிட்டது. ஆனால் அவற்றில் வெற்றி பெற முடியவில்லை.