tamilnadu

img

பயிற்சி விமான விபத்து: தமிழகத்தை சேர்ந்த விமானி உட்பட 2 பேர் பலி

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசாவில் தெங்கனல் மாவட்டத்தில் கங்கடஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசால் ஏர்ஸ்ட்ரிப்பில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது பயிற்சியில் இருந்த தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் உயிரிழந்து உள்ளனர். 
கேப்டன் சஞ்சீப் குமார் ஜா மற்றும் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.