tamilnadu

img

கொரோனாவை வெல்ல ஒன்றுபட்டு பாடுபடுவீர்!

என். சங்கரய்யா அழைப்பு

சென்னை, ஜூலை 15- தொற்று நோயை வெல்ல ஒன்றுபட்டு பாடுபடுவீர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அழைப்பு விடுத்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒரு வருமான என்.சங்கரய்யா, ஜூலை 15 புத னன்று தமது 99 வயதை எட்டினார். அவ ருக்கு கட்சியின் அகில இந்திய மாநிலத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள், அரசியல் இயக்கங் களின் தொண்டர்கள், கம்யூனிஸ்ட் இயக்கங் களின் தொண்டர்கள் என ஏராளமானோர் பல்வேறு வடிவங்களில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்.  இவற்றை ஏற்றுக் கொண்டு, கட்சியின் மாநிலக்குழுவின் முகநூல் பக்கத்தில் அவரது உரை, பிறந்த நாள் செய்தியாக ஒளி பரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்ப தாவது:

உலகம் முழுவதும் கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ கத்தில் அந்ததாக்குதலினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங் களுக்கு நெஞ்சார்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார ஊழி யர்கள், அரசு ஊழியர்கள், சமூகநல ஊழி யர்களும் இறந்துள்ளனர். அவர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன். கொரோனா பேரிடருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யர்கள் சிறப்பாக பணியாற்றி வருவது திருப்தி யளிக்கிறது. இந்தப்பணிகள் தொடர வேண்டும். சகல பகுதியினருடன் இணைந்து  அனைத்து பகுதி மக்களின் துன்பங்களை யும் போக்க பணியாற்ற வேண்டும். அர சியல், சமூக, சாதி வேறுபாடு இன்றி செய லாற்றுவோம். தொண்டர்களும், தோழர் களும் பேரிடர் மீட்பு பணியில் மேலும் தங் களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுடைய தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்க ப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வரும் அரசியல் கட்சி ஊழியர்கள், சமூக இயக்கங்களின் ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் சேவை தமிழகத்தின் வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இன்றைக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கையில், உலகம் முழுமை யிலும் தொற்று பரவி வருவதை சுட்டிக்காட்டி யுள்ளார். ஒவ்வொரு நாடும் தங்களது நிலை மைக்கேற்ப தொற்றை சமாளிக்க நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள் ளார். இந்த சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, 12ஆம் தேதியன்று ஒரு விரிவான அறிக்கையை நாட்டிற்கு சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்படும் அனைவருக்கும் இலவச உணவும், தானியமும் அடுத்து பல  மாதங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் ரொக்கம் வழங்க கோரியிருக்கிறார். இதை மத்திய - மாநில அரசுகள் கவனித்து நட வடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். விவசாயத் தொழில் சீராக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், சிறு குறு நடுத்தர தொழில்களில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தேவை யானவற்றை செய்ய வேண்டும். நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் அடிப்படை யானது பொதுத்துறைகள்தான். இதை பல வீனப்படுத்த சில முயற்சிகள் நடக்கின்றன. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும். பொதுத் துறைகளை பாதுகாத்து, பலப்படுத்த வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரங்கள் பற்றி அரசியலமைப்பு சட்டம் கூறி யுள்ளதை கறாராக நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பாது காக்க வேண்டும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாது காக்க வேண்டும்; கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டும்; அதனை மீறக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு; மதச்சார்பற்ற அரசு. இந்திய மக் களின் எதிர்காலம் மதச்சார்பற்ற நாடு, மதச்சார்பற்ற அரசு தொடர்ந்து நீடித்து வரு வதிலேயே அடங்கியிருக்கிறது. எனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத் துள்ள கோரிக்கைகளின் பின்னால் மதச்சார் பற்ற, இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஒன்று பட்டு கோரிக்கைகளை வெல்ல பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.