tamilnadu

img

காற்றாலை மின் உற்பத்தி: முதலமைச்சர் பார்வையிட்டார்

சென்னை,ஆக.31- தொழில் முதலீடுகளை ஈர்க்க  இங்கிலாந்து சென்றுள்ள தமி ழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அந்நாட்டில் சபோல்க் நகரில்  உள்ள ஐ.பி.ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட்  நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறை யில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பார்வையிட்டார். அப்போது, அந்நாட்டில் 2050-ம் ஆண்டிற்குள் நிலக்க ரியை எரித்து மின்சாரம் தயா ரிக்கும் முறையை அறவே ஒழிக்க  அரசு இலக்கு நிர்ணயித்துள்ள தாகவும், அதற்குள் முழுவதும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்பாட்டை விரிவாக்கும் வகை யில் தங்கள் நிறுவனம் செயல்  பட்டு வருவதாகவும் அந்நிறுவ னத்தினர் கருத்து தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் செயல் பாடுகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அத்திட்டத்தைத் தமிழ் நாட்டில் செயல்படுத்தும் முறை கள் குறித்தும் விரிவாக விவா தித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் எம்.சாய்குமார், பி.செந்தில்குமார் மற்றும் ஐ.பி.ஸ்விட்ச்ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தின் உயர் அலு வலர்கள் உடனிருந்தனர்.