நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி துறையை ஏன் ஏற்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.
மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆகியவை குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.