tamilnadu

img

நமது போராட்டம் ஓயக் கூடாது

மனுவைக் கொண்டு போய் பொது சுடுகாட்டில் தகனம் செய்யும் வரை

மதுக்கூர் இராமலிங்கம்  அழைப்பு

தஞ்சாவூர், செப்.28- தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13-ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மாலை மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டு “மனு இன்னும் சாகவில்லை” என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது: தொழிலாளர்களில் இன, மொழி பேதம் நாம் பார்ப்பதில்லை என்றாலும் கூட, தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இன்று வங்கி, அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் அதில் வெளி மாநி லத்தவர் பங்கு அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ச அளவிலாவது தமிழர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.   மனுவைக் கண்டால் அவன் குரல் வளை யைக் கடித்து துப்பி விடுவேன் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். ஆனால் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை யை தத்துவப் பாடமாக படிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர். மாணவர்களுக்கு பகவத்கீதையை சொல்லித் தர வேண்டிய அவ சியம் என்ன? கல்வியில் மதத்தை புகுத்தும் செய லாகத் தான் இதை பார்க்க வேண்டும். இதிலி ருந்து ஒன்று தெளிவாகிறது. கிருஷ்ணர் சொன்ன, ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ என்பது போல, படிப்பது உன் கடமை, பலனை எதிர்பார்க்காதே, வேலை கிடைக்காது எனச் சொல்லாமல் சொல்கிறார் களோ என்னவோ? 

நமது கண் முன்னே காஷ்மீர் மாநிலம் சிதைக் கப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் வகுப்பறைகளுக்குச் சென்று 2 மாதங்களாகிறது. இங்கே நம்முடைய குழந்தை சந்தோசமாக இருக்கும் போது காஷ்மீர் குழந்தை கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதே என எண்ணி, எவன் கலங்குகிறானோ, அவனே நல்ல மனிதனாக, படித்த, பண்பான மனிதனாக இருக்க முடியும்.  இந்தி மொழியை வலிந்து திணிக்கின்றனர். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரான வர்கள் அல்ல நாம். விரும்பினால் எவரும் இந்தி கற்றுக் கொள்ளட்டும். விரும்பாதவர் மீது ஏன் திணிக்க வேண்டும். 

மற்ற மாநிலங்கள் இந்தியை, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு நம்முடைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெளிவாக சொல்லி விட்டார். நாங்கள் தமிழ்நாட்டில் கல்வியை, தமிழ்  என்னும் பயிரை நன்றாக விளைவித்து வைத்துள்ளோம். மாடு வயலில் புகுந்தால், விவசாயி எப்படி விரட்டி அடிப்பானோ, அதைத் தான் நாங்களும் செய்கிறோம் என்றார்.  பெண்களை மனு தர்மம் எவ்வளவு இழிவு படுத்துகிறது. ஆடிட்டர் குருமூர்த்தி 30 சதவீதம் பெண்கள் தான் பெண்களாக உள்ளனர் என்கி றார். மற்ற பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எஸ்.பி.சேகர் ஊடகத்துறையில் உள்ள பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்கி றார். இவையெல்லாம் மனு இன்னும் சாக வில்லை என்பதைத் தான் சொல்கிறது. ஆணும், பெண்ணும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தா லும், பெண்கள் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய நிலை. ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என எவரெல்லாம் நினைக்கிறார் களோ, அவர்களும் மனு தான்.  புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கனும் மனு தான். பள்ளிக் குழந்தை களை தரம் பிரிக்காதீர்கள். உயர்வு தாழ்வு பார்த்து ஒப்பிடாதீர்கள். புதிய கல்விக் கொள்கை நமது குழந்தைகளை சீரழிக்க நினைக்கிறது.  இன்றும் பல்வேறு வகைகளில் சாதியப் பாகு பாடுகள் உள்ளன. தீண்டாமை உள்ளது. கிரா மங்களில், அலுவலகங்களில் என பல இடங்க ளில் தீண்டாமையை உணர முடியும். இரட்டைக் குவளை முறை இல்லை எனச் சொல்ல முடியுமா. குடியரசுத் தலைவரையே கோயிலுக்குள் விட மறுக்கின்றார்கள் என்றால் தீண்டாமை எவ்வாறு உள்ளது என்பதை உணர முடியும். 

அரசு ஊழியர்களே, நீங்கள் உங்கள் அதி காரத்தை பயன்படுத்தி தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சாதிய பாகுபாட்டை தகர்க்க வேண்டும். பிறப்பால் நான்  உயர்ந்தவன் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களை விட மனநோயாளிகள் வேறுயாரும் இருக்க முடியாது.  சாதி, மதத்தின் பெயரால் ஆட்சி அமைந்த பிறகு நாடு முழுவதும் மக்கள் கடும் பிரச்சனை யை சந்தித்து வருகின்றனர். மனுவை கொண்டு போய் பொது சுடுகாட்டில் தகனம் செய்யும் வரை நமது பணி ஓயக்கூடாது. அதுவரை நாம் ஒன்றி ணைந்து போராடுவோம் என சூளுரைக்க வேண்டும்”. இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் பேசி னார்.  பின்னர் சனிக்கிழமை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. மாநில துணைத் தலை வர்கள் ந.குமாரவேல், எஸ்.தமிழ்ச்செல்வி, சு. பார்த்திபன், மொ.ஞானத்தம்பி, எம்.சுப்பிரமணி யன், மாநிலச் செயலாளர்கள் ஆர்.பன்னீர் செல்வம், சி.ஆர்.ராஜ்குமார், என்.ஜனார்த்த னன், தி.கலைச்செல்வி, எம்.சௌந்தரராஜன், ஆ.பெரியசாமி ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினர். அரசு ஊழியர் இதழ் அதிக சந்தா சேர்த்த மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து மாலையில் மகளிர் சிறப்பு கருத்தரங்கம் மாநில துணைத்தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தி.கலைச்செல்வி வர வேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கருத்துரையாற்றினார். மாநில மகளிர் துணைக் குழு ச.செல்வி நன்றி கூறினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.