tamilnadu

img

கேரளத்துக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பாராட்டு

வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருவோருக்கான திட்டமிடல்

வெளிநாடுகளிலிருந்து திரும்பியுள்ளவர்களுக்கான கேரளத்தின் திட்ட மிடலை மற்ற மாநிலங்கள் மாதிரியாக கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் பாராட்டியுள்ளார்.  இதுகுறித்து சனியன்று திருவனந்தபுரத்தில் நடந்த கோவிட் கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

வெளிநாடுகளிலிருந்து கேரளம் திரும்ப உள்ளவர்களுக்காக செய்யப் பட்டுள்ள முன்னேற்பாடுகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. கேரளத் தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நன்மதிப்பு கொண்டுள்ளது. சனியன்று மத்திய அமைச்சரவை செயலாளர் மாநில தலை மைச் செயலாளருடன் நடத்திய காணொலி சந்திப்பில் திரும்பி வருவோ ருக்கு கேரளம் செய்துள்ள நடவடிக்கைகள் விளக்கி கூறப்பட்டது. வெளிநாடு களிலிருந்து திரும்பி உள்ளவர்களுக்கான கேரளத்தின் திட்டமிடலை மற்ற மாநிலங்கள் மாதிரியாக கொள்ள வேண்டும் என்று அமைச்சரவை செயலா ளர் பாராட்டினார்.

பாதிப்பு 7, குணமானோர் 7

சனியன்று கோட்டயம், கொல்லம் மாவட்டங்களில் தலா 3 பேர், கண்ணூ ரில் ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏழு பேர் குண மடைந்துள்ளனர். மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த கூத்துப்பறம்பைச் சேர்ந்த அபூபக்கர் (84) குணமடைந்துள்ளார். ‘மிகுந்த ஆபத்து’ என்கிற நிலையில் சிறுநீரக நோய் உள்ளிட்ட சுகாதார பிரச்சனை கள் கொண்ட அபூபக்கர் குணமடைந்து வீடு திரும்பியது சாதனைதான். இதற் காக உழைத்த சுகாதார ஊழியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். 

மற்ற மாநிலங்களிலிருந்து கேரளம் மாறுபட்டது. நகர்மயமான கிராமங்க ளைக் கொண்டது. தீவிர பகுதிகளுக்கு (ஹாட் ஸ்பாட்) வெளியே உள்ள கடை களை திறக்க அனுமதிக்க வேண்டும். உத்தரவு வந்த உடன் கடை திறக்க லாம் என்று கருத வேண்டாம். கடை களை சுத்தம் செய்து கிருமி விலக்கு செய்யப்பட்ட பிறகே திறக்க வேண் டும். அதற்கு நமது வியாபாரிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தேவையான வழிமுறைகளுடன் கூடிய உத்தரவை மாநில அரசு பிறப் பிக்கும். 

கேரளத்திற்கு வெளி மாநிலங்களி லிருந்து ஆட்கள் வருவதும் அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் தொடர்கின்றன. இதில் மாவட்ட நிர்வா கங்கள் எந்தவித சமரசத்துக்கும் இடம ளிக்கக் கூடாது. பாதுகாப்பு முன்தயா ரிப்புகள் இல்லாமல் எல்லை கடப்ப வர்களை கண்டுபிடித்து தடுக்க வேண் டும். ஊரடங்கை முறையாக கடைப் பிடிக்க வேண்டும். சில இடங்களில் ஆபத்தான மீறல்கள் நடக்கின்றன.  சமூக நல நிதிகள் திட்டம் கேர ளத்தில் நல்லமுறையில் செயல்படுத் தப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு நல நிதியிலும் உட்படாத சிரமப்படும் குடும் பங்களும் நபர்களும் உள்ளனர். எந்த உதவியும் கிடைக்காத பிபிஎல் குடும் பங்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர் களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஊடகத்துறையில் பாதிப்பு

ஊடகத்துறையையும் கொரோனா கடுமை யாக பாதித்துள்ளது. பல பத்திரிகைகள் பங்கங் களை குறைத்துள்ளன. சமூகத்தில் பொது நிகழ்ச்சிகளும், வர்த்தகமும் இல்லாததால் விளம்பரம் கிடைப்பதில்லை என்கிற நெருக்கடி யை ஊடகங்கள் சந்திக்கின்றன. களத்தில் செயல் படும் செய்தியாளர்கள் நோய்க்கு இலக்காகும் ஆபத்தும் உள்ளது. நாட்டின் பல நகரங்களிலும் செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளத்தின் செய்தி யாளர்களை கொரோனா பரிசோதனை களுக்கு உட்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கை களில் அரசு தலையிடும். 

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை வேலை நீக்கம் செய்யவோ, சம்பள குறைப்போ கூடாது. சுகாதாரப் பணியாளர்களுடன் செய்தி யாளர்கள் தோளோடு தோள் சேர்ந்து செயல் பட்டு வருகிறார்கள். செய்தி சேகரிப்பதில் அவர் களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என காவல் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து ஊடகங்க ளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைகளை உடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைகள் துவக்கம்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப் போது கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நிச்ச யிக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் துவக்கப்பட் டுள்ளன. தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா அறி குறியுடன் வருவோருக்கு சிகி ச்சை அளிக்க தனி ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதா ரத்துறையின் அறிவுறுத்தல் களை பின்பற்றி மருத்துவ மனைகள் செயல்பட வேண் டும். ஆனால் சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் கருவிகளும் இல்லை என்கிற புகார் எழுந் துள்ளது. 

ஆர்சிசியில் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு முன்பு நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அறுவை சிகி ச்சையின் போதும் அதன் பிற கும் சுகாதாரப் பணியாளர் கள் அவர்களை தொட வேண் டிய கட்டாயம் உள்ளதை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கொரோனா வந்தால் விரை வில் ஆபத்தான நிலைக்கு சென்று விடும். புற்றுநோய்க் கான அறுவை சிகிச்சை அதிக நாட்கள் தள்ளி வைக்க முடி யாது. எனவே ஆர்சிசியில் அறுவை சிகிச்சை துவக்கப் பட்டுள்ளது. ஆர்சிசி கொரோனா ‘பரிசோதனை மையத்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதி கிடைக்கும்வரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.