நாடகத் துறையில் 50 ஆண்டுகாலம் தடம் பதித்து , சங்கீத நாடக அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளை கவுரவித்த உஷா கங்குலி இன்று நம்மிடையே இல்லை. இது கொரோனா கொடுங்காலமாக இல்லாதிருந்தால் நாடு முழுவதும் உள்ள அரங்க செயற்பா ட்டாளர்கள் அவரது நினைவைப் போற்றியிருப்பார்கள்; வீரவணக்கம் செலுத்தியிருப்பார்கள் . இருப்பினும் கைவிரல்கள் எண்ணிக்கையிலேனும் ஒன்றிணைந்து அந்த ஒப்பற்றக் கலை ஆளுமைக்குக் காணொலி காட்சி வாயிலாக நினைவேந்தல் கூட்டம் நடத்தியுள்ளனர்
1945 ஆம் ஆண்டு ஜோத்பூரில் பிறந்த கங்குலி கொல்கத்தாவில் வளர்ந்தார் . யாரும் எதிர்பாராதவிதமாக 25ஆவது வயதில் - 197ல் - நாடகத் துறைக்கு வந்தார் . அதில் நடிப்பு , இயக்கம் , குழுத் தலைவர் என பல நிலைகளிலும் வல்லுநராகப் பரிணமித்தார் . " ரங்காகர்மீ " என்ற தனது பெரிய கலைக் குழுவின் மூலம் ஏராளமான நாடக நிகழ்வுகளை நடத்தினார். தமது நிகழ்வுக ளுக்கான இடம் இப்படித்தான் என அவர் வரையறை செய்துகொண்டதில்லை . எங்கேயும் எப்போதும் என்பதே அவரது கொள்கையாக இருந்தது .
மேடைகளில், விழா க்களில், திறந்த வெளிகளில் அவரது நாடகங்கள் நிகழ்த்தப்ப டட்டன . அவ்வளவு ஏன் , அலுவலகங்களில் மேசைகளை ஓரம் கட்டிவிட்டு அங்கே யும் நாடகத்தை நடத்திவிடுவார் . பெண்க ளுக்கு எதிரான வன்முறை, வகுப்புவாத மயமாக்கப்படும் சமூகம் போன்றவை நிகழ்வுக் களங்களாக இருந்தன. நாடகங்களை நிகழ்த்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அரங்கக் கலை பற்றிய பயிலரங்குகள் , கருத்தரங்குகள் , ஆய்வரங்குகள் ஆகியவற்றுக்கும் உஷா கங்குலி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயணம் மேற்கொண்டார் .
பாகிஸ்தானின் அஜோகா தியேட்ட ரோடும் , பங்களாதேஷின் முகுல் அகமது டனும் அவர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கலைவழி நட்புப்பாலம் அமைத்தார் . அண்மையில்கூட பலவகை அரங்குகளின் சங்கமமாக தெற்கு கொல்கத்தாவில் பினோதினி கேயா மஞ்ச்சா ரங்காகர்மீ ஸ்டுடியோ தியேட்டர் என்பதைத் தமது குழுவின் துணையோடு நிறுவினார். இளம் கலைஞர்கள் பலருக்கு அவர் உந்துசக்தி , வழி காட்டி , உதவியாளர். அவர்கள் மேம்பாட்டில் அக்கறை கொண்ட உஷா கங்குலியின் இல்லக் கதவுகள் அவர்களுக்காக எப்போதும் திறந்தே இரு ந்தது . ஹபீப் தன்வரின் நயா தியேட்டரோடு இணைந்து ரவீந்தரநாத் தாகூரின் ' விசர்ஜன் ' நாடகத்தைத் தயாரித்தார். கற்பதிலும் , பலவகையான அரங்க செயற்பாட்டாளர்களுடன் , அறிஞர்க ளுடன் ஒத்துழைப்பதிலும் , வழிபாட்டிலும் அவருக்குத் தணியாத தாகம் இருந்தது.
இந்தத் தாகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக, 10 ஆண்டுகளுக்கு முன் - 2010 ல் - நடந்த நிகழ்வைச் சொல்லலாம். லாகூரின் அனார்கலி பஜாரில் சிலர் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். இதனால் ஈர்க்கப்பட்ட உஷா கங்குலி அவர்களோடு இணைந்து 45 நிமிடங்கள் சுழன்றாடினார். அப்போது அவருக்கு வயது 65 என்பதை எண்ணிப் பார்க்கும் போதுதான் இதன் சிறப்பும் , கலை மீதான அவரின் ஆர்வமும் புரியும் . அரங்க செயற்பாட்டின் மூலம் 50 ஆண்டுகளாக ஏராளமானவர்களின் இதயத்துடிப்பாக இருந்த உஷாகங்குலியின் நாடித்துடிப்பு 75 வது வயதில் 2020 , ஏப்ரல் 23 அன்று நின்றுபோனது.
ஆனால் அவரின் அயராத , 50 ஆண்டுகால அரங்க செயல்பாட்டின் அழியா நினைவுகளை அநாமிகா ஹக்சர் , அஞ்சும் கத்யால் , அனுராதா கபூர் , அருந்ததி நாக் , பகீரதி பாய் , கீர்த்தி ஜெயின் , அ . மங்கை , மாலாஸ்ரீ ஹாஷ்மி , நீலம் மான்சிங் சவுத்ரி , சமீரா அய்யங்கார் ஆகிய சமகால நாடக ஆளுமைகள் , கலைஞர்கள் காணொலி காட்சியில் பகிர்ந்தனர். உஷா கங்குலி விட்டுச்சென்றுள்ள அரங்கப் பணிகளை , சமூகப்பணிகளை , இளம் தலைமுறையினரில் அரங்கச் செயற்பாட்டாளர்களை உருவாக்கி வளர்க்கும் பணிகளைத் தொடர்வோம் என உறுதியேற்பதாக இந்த அஞ்சலி நிகழ்வு அமைந்தது.