tamilnadu

img

அரைநூற்றாண்டு அரங்க செயற்பாட்டாளர் உஷா கங்குலிக்குப் புகழஞ்சலி

நாடகத் துறையில் 50 ஆண்டுகாலம் தடம் பதித்து , சங்கீத நாடக அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளை கவுரவித்த  உஷா கங்குலி இன்று நம்மிடையே இல்லை. இது கொரோனா கொடுங்காலமாக இல்லாதிருந்தால் நாடு முழுவதும் உள்ள அரங்க செயற்பா ட்டாளர்கள் அவரது நினைவைப் போற்றியிருப்பார்கள்;  வீரவணக்கம் செலுத்தியிருப்பார்கள் .  இருப்பினும் கைவிரல்கள் எண்ணிக்கையிலேனும் ஒன்றிணைந்து அந்த ஒப்பற்றக்  கலை ஆளுமைக்குக்  காணொலி காட்சி வாயிலாக நினைவேந்தல் கூட்டம் நடத்தியுள்ளனர்

1945 ஆம் ஆண்டு ஜோத்பூரில் பிறந்த கங்குலி கொல்கத்தாவில் வளர்ந்தார் . யாரும் எதிர்பாராதவிதமாக 25ஆவது வயதில்  - 197ல் - நாடகத் துறைக்கு வந்தார் . அதில் நடிப்பு ,  இயக்கம் , குழுத் தலைவர் என பல நிலைகளிலும் வல்லுநராகப்  பரிணமித்தார் . " ரங்காகர்மீ "  என்ற தனது பெரிய கலைக் குழுவின் மூலம் ஏராளமான நாடக நிகழ்வுகளை நடத்தினார்.  தமது நிகழ்வுக ளுக்கான இடம் இப்படித்தான் என அவர்  வரையறை செய்துகொண்டதில்லை . எங்கேயும் எப்போதும் என்பதே அவரது கொள்கையாக இருந்தது .

மேடைகளில்,  விழா க்களில்,  திறந்த வெளிகளில் அவரது நாடகங்கள் நிகழ்த்தப்ப டட்டன .  அவ்வளவு ஏன் , அலுவலகங்களில் மேசைகளை ஓரம் கட்டிவிட்டு அங்கே யும் நாடகத்தை நடத்திவிடுவார் .  பெண்க ளுக்கு எதிரான வன்முறை,  வகுப்புவாத மயமாக்கப்படும் சமூகம்  போன்றவை நிகழ்வுக் களங்களாக இருந்தன.   நாடகங்களை நிகழ்த்துவதோடு  நிறுத்திக்கொள்ளாமல் அரங்கக் கலை பற்றிய பயிலரங்குகள் ,  கருத்தரங்குகள் ,  ஆய்வரங்குகள் ஆகியவற்றுக்கும் உஷா கங்குலி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயணம் மேற்கொண்டார் .

பாகிஸ்தானின்  அஜோகா தியேட்ட ரோடும் , பங்களாதேஷின் முகுல் அகமது டனும்  அவர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கலைவழி நட்புப்பாலம் அமைத்தார் . அண்மையில்கூட பலவகை அரங்குகளின்  சங்கமமாக  தெற்கு கொல்கத்தாவில்  பினோதினி கேயா மஞ்ச்சா  ரங்காகர்மீ ஸ்டுடியோ தியேட்டர் என்பதைத் தமது குழுவின் துணையோடு  நிறுவினார். இளம் கலைஞர்கள் பலருக்கு அவர் உந்துசக்தி , வழி காட்டி ,  உதவியாளர். அவர்கள் மேம்பாட்டில் அக்கறை கொண்ட உஷா கங்குலியின் இல்லக்  கதவுகள் அவர்களுக்காக எப்போதும் திறந்தே இரு ந்தது . ஹபீப் தன்வரின் நயா தியேட்டரோடு இணைந்து ரவீந்தரநாத் தாகூரின்  ' விசர்ஜன் '  நாடகத்தைத்  தயாரித்தார்.  கற்பதிலும் , பலவகையான அரங்க செயற்பாட்டாளர்களுடன் ,  அறிஞர்க ளுடன் ஒத்துழைப்பதிலும் ,   வழிபாட்டிலும் அவருக்குத் தணியாத தாகம் இருந்தது.

இந்தத் தாகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக, 10 ஆண்டுகளுக்கு முன்  - 2010 ல் -  நடந்த நிகழ்வைச் சொல்லலாம்.  லாகூரின் அனார்கலி பஜாரில் சிலர் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.  இதனால் ஈர்க்கப்பட்ட உஷா கங்குலி அவர்களோடு இணைந்து 45 நிமிடங்கள் சுழன்றாடினார்.  அப்போது அவருக்கு வயது 65 என்பதை எண்ணிப் பார்க்கும் போதுதான் இதன் சிறப்பும் ,  கலை மீதான அவரின் ஆர்வமும் புரியும் . அரங்க செயற்பாட்டின் மூலம் 50 ஆண்டுகளாக ஏராளமானவர்களின்  இதயத்துடிப்பாக இருந்த  உஷாகங்குலியின்  நாடித்துடிப்பு  75 வது வயதில்  2020 , ஏப்ரல் 23 அன்று நின்றுபோனது.

ஆனால் அவரின் அயராத , 50 ஆண்டுகால அரங்க செயல்பாட்டின் அழியா  நினைவுகளை அநாமிகா ஹக்சர் , அஞ்சும் கத்யால் , அனுராதா கபூர் ,  அருந்ததி நாக் ,  பகீரதி பாய் ,  கீர்த்தி ஜெயின் , அ . மங்கை ,  மாலாஸ்ரீ ஹாஷ்மி ,  நீலம்  மான்சிங் சவுத்ரி , சமீரா அய்யங்கார் ஆகிய சமகால நாடக ஆளுமைகள் ,  கலைஞர்கள் காணொலி காட்சியில் பகிர்ந்தனர். உஷா கங்குலி விட்டுச்சென்றுள்ள அரங்கப் பணிகளை , சமூகப்பணிகளை , இளம் தலைமுறையினரில் அரங்கச் செயற்பாட்டாளர்களை உருவாக்கி வளர்க்கும் பணிகளைத் தொடர்வோம் என உறுதியேற்பதாக இந்த அஞ்சலி நிகழ்வு அமைந்தது.