tamilnadu

img

சட்ட விரோத குவாரியை மூடச் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல்

புதுக்கோட்டை, செப்.8- புதுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரியை மூடச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்த வரை குடும்பத்தோடு கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தொல்லியல் அடையாளங்களும், வரலாற்று சுவடு களும் மண்ணில் புதைந்தும், பாறை களில் செதுக்கப்பட்டும் உள்ளது. இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்தன்னவாசல், திருவேங்கை வாசல், குடுமியான்மலை பகுதிகளை சுற்றிலும் இருக்கக்கூடிய ஏராளமான கிராமங்களில் கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு வரலாற்று ஆவணங்கள் மண்ணோடு மண்ணாகி கொண்டிருப்ப தாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.  மற்றொரு பக்கம் கல்குவாரிகளில் அதிக சத்தத்து டன் வெடிகள் வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், வீடுகள் வரலாற்றுச் சுவடுகளும் சிதைந்து வருகிறது.

அதே போல வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் முதுமக்கள் தாழிகள் மற்றும் நினைவு சின்னங்கள், நடுகற்கள் முற்றிலுமாக அழிக்கப் பட்டு வருவதை கடந்த சில மாதங் களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை கண்டித்தது டன் அவற்றைப் பாதுகாக்கவும் உத்தர விட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளவில்லை. இப்படியான கிராமங்களில் பெருஞ்சுனை முதுமக்கள் தாழி நிறைந்த கிராமமாக உள்ளது. இந்த  கிராமம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் சொந்த கிராமம். இந்த கிராமத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் வெட்டி எடுக்க முயற்சி நடந்தது. அப்போது அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ளது சிறுஞ்சுனை கிராமம். இங்கு சட்ட  விரோதமாக கல்குவாரிகள் நடத்தப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இங்கு பாறைகளை உடைக்க பலமான வெடிகள் வெடிக்க செய்வ தால் கிராமத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்ததுடன் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், சிறுஞ்சுனை கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தன் விளை நிலத்திற்கு அருகில் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்தப்படு கிறது. அதில் பலமான சத்தத்துடன் வெடி வெடிப்பதால் வீடுகள் சேதம் அடைவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்திருந்தார்.  இதனால் இந்த சட்ட விரோத குவாரியை மூட அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த தகவல் அறிந்த குவாரியை நடத்தி வந்த  நபரின் அடியாட்கள் பரமசிவம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டி  உள்ளனர்.  அதிகாரிகளிடம் கொடுத்த  புகாரை திரும்பப் பெறாவிட்டால் குடும்பத்தோடு அழித்து விடுவோம் என்று மிரட்டப்பட்டதால் விவசாயி பரமசிவம் குடும்பத்தினர் அதிர்ச்சி யுடன் தெரிவிக்கின்றனர். இந்த பகுதி, அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.