தருமபுரி, அக்.22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யரான கந்தசாமி, கடந்த சில தினங் களுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை யில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நடைமுறைக்கு ஒத்து வராத சில பணிகளை செய்யச்சொல்லி உரிய கால அவகாசம் வழங்காமல் நிர்ப்பந்தம் செய்துள்ளார். மேலும் ஊழியர் விரோத போக்குடன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக எச்சரித்துள்ளார். மேலும் அலுவ லர்களுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளி யிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கும், மன உளைச் சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதை யடுத்து மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து செவ்வாயன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். தருமபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ருத்ரையன் தலைமை வகித் தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமாஜெயம் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், மாவட்டப் பொருளாளர் கே. புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதேபோல், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் வட்டத் தலைவர் ஆனந்தவிஜய ராகவன் தலைமையில் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எம்.சுருளிநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார். அரூரில் மாவட்டச் செயலாளர் கோபி நாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். பாலக்கோட்டில் வட்டத்தலைவர் குணசேகரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் சர்வோத்தமன், சாக்ரடீஸ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். காரிமங்க லத்தில் வட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் வட்டச் செயலாளர் சுபாஷ், பொருளாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் வட்டத்தலைவர் நீலமேகம் கண்டன உரையாற்றினார். இதேபோல், நல்லம்பள்ளியில் வட்டத்தலைவர் ராஜேஸ்வரி தலை மையிலும், பென்னாகரத்தில் வட்டத் தலைவர் நீலமேகம் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. தருமபுரி மாவட்டம் முழு வதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் திரளாக கலந்து கொண்டனர்.