tamilnadu

img

15 நாள் சுய ஊரடங்கு முடிவு எடுத்த கிராம மக்கள்

டாஸ்மாக் கடையையும் மூட வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் அருகே மருங்குளம்  கிராமம் 4 ரோடு சந்திப்பில் மளிகை  உள்ளிட்ட சுமார் 100 கடைகள்  உள்ளன. வடக்குப்பட்டு, புதுப்பட்டி  உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு மைய மாக உள்ளதால் தினமும் ஏராள மானோர் மருங் குளத்துக்கு வந்து  கடைவீதிகளில் அன்றாடம் அத்தி யாவசியப் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவ ருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தையடுத்து, முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக மருங்குளத்தில்  உள்ள அனைத்து வியாபாரி களும் ஒட்டுமொத்தமாக அனைத்து கடைகளையும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடினர். மேலும், மருங்குளம் 4 ரோட்டுக்கு அருகில் உள்ள கிராம மக் கள் யாரும் பொருட்கள் வாங்க  வர வேண்டாம் எனவும் ஆட்டோக்  கள் மூலம் விளம்பரம் செய்தனர்.  பெட்ரோல் பங்க், மருந்துக் கடை, டாஸ்மாக் கடை மட்டுமே  தற்போது இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு வரும் மது  அருந்துவோரால் தொற்றுநோய்  பரவ வாய்ப்புள்ளதாக கருதி டாஸ்மாக் கடையையும் 15 தினங்க ளுக்கு மூட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மருங்குளம் பகுதி வர்த்தகர்கள் கேட்டுக் கொண் டுள்ளனர்.
 

 

;