நாகர்கோவில், பிப்.23- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை நாகர்கோவிலிலும் சென்னையிலும் 47 முறை பேச்சுவார்த்தை நடந்தும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது கோட்டங்களிலும் சுமார் 3000 தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். வெள்ளியன்று நடைபெற்ற 50ஆவது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடி வடைந்தது. இந்நிலையில் சனியன்று தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அவரிடம் அளித்த னர். இதனை பெற்றுக் கொண்ட முதல் வர், இதுதொடர்பாக உரிய நடவடி க்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஞாயிறன்று தோவாளையில் உள்ள அரசு விருந்தி னர் மாளிகையில் அதிமுக தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை யில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களு டன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் மார்ச்15 ஆம் தேதிக்குள் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் உறுதி யளித்துள்ளார். இதுகுறித்து குமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் பொன்மனை வல்சகுமார் தெரிவித்துள்ளதாவது, அரசு ரப்பர் கழகம் தொழி லாளர்களின் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காணாததை தொடர்ந்து நடை பெற்றுவரும் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறையில் எந்த முன்னே ற்றமும் ஏற்படவில்லை. சனியன்று தூத்துக்குடியில் வைத்து தமிழக முதல்வரை தொழில் சங்கங்கள் சார்பில் சந்தித்தோம். கோரிக்கை தொடர்பாக முதல்வரின் தலையீடு கோரியிருந் தோம். தொடர்ந்து ஞாயிறன்று தமிழக அரசின் தில்லி பிரதிநிதி முன்னிலையில் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்தது. தற்பொழுது கோரிக்கை தொடர்பாக வனத்துறை அமைச்ச ரோடு தில்லி பிரதிநிதி பேசியதை தொடர்ந்து திங்களன்று தலைமை செயலாளர் மற்றும் வனத்துறை அமை ச்சர் உள்ளிட்ட குழுவோடு இப் பிரச்ச னைக்கு முடிவு ஏற்படுத்த கலந்து பேசு வதற்காக நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர்