தஞ்சாவூர் ஜூலை 27- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்த வர் ராஜா இவரது மகன் விஸ்வநாதன்(22) ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா, செங்குந்தபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் எழிலரசி (20) பட்டதாரி. இவரும் தனது உற வினர் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது அங்கு உதவி செய்வதற்காக தங்கி யுள்ளார். அப்போது விஸ்வநாதனுக்கு எழிலர சிக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இருவரது காதலும் பெற்றோர்க ளுக்கு தெரிய வர எழிலரசியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலை யில் எழிலரசி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதன் வீட்டிற்கு வந்துவிட்டார். தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தென்னமநாடு நடுத்தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்த தகவலறிந்த எழிலரசியின் குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில், இனி இந்த பெண்ணிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதிக் கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு மாத கர்ப்பிணியான எழிலரசி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து கடத்தி சென்றதாக கணவர் விசுவநாதன் ஒரத்தநாடு காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட ஒரத்தநாடு காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.