சிபிஎம் கண்டனம்
புதுக்கோட்டை, நவ.16- கஜா புயல் தாக்கி ஒரு ஆண்டாகியும் மக்க ளின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாத மளிக்காத தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வீசிய கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப் போட்டது. குடிசை மற்றும் ஓட்டு வீடு கள் முற்றிலுமாக சேதமடைந்தன. காங்கிரீட் வீடுகள், பள்ளி, அங்கன்வாடி மைய கட்டி டங்கள் பெரிய அளவிற்கு சேதமடைந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதர சாகுபடிகளும் முற்றிலு மாக பாதிக்கப்பட்டன. மக்கள் வேற்றுக் கிரக வாசிகளைப் போல ஒரு மாதத்திற்கும் மேலாக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள முடி யாத அளவுக்குத் தவித்தனர். புயலில் சிக்கி புதுக்கோட்டை மாவட்டத் தில் 9 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்க ணக்கானோர் படுகாயமடைந்தனர். 2 லட்சத்து க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. தென்னை, மா, பலா, புளி, வேம்பு, தேக்கு என பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி, வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட சாகுபடிகள் முற்றிலுமாக பாதிக் கப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்தன. 2 ஆயிரத்திற் கும் அதிகமான படகுகளை இழந்து மீன வர்கள் தவித்தனர்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் மந்தகதியில் செயல்பட்டது. இத னால், மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி, மின்சா ரம் இன்றி, உணவு இன்றி, மருத்துவம் இன்றி பல நாட்கள் கடும் சோதனைகளை சந்தித்த னர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாரணம் பொ ருட்களே மக்கள் மூச்சு விடக் காரணமாக இருந்தது. அரசு அறிவித்த நிவாரணம் பொ ருட்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு அங்கொன் றும் இங்கொன்றுமாக சில இடங்களில் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருட்கள் கிடைக்காத மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்கள் சாலை ஓரங்களில் எங்கிருந்தாவது நிவாரணப் பொருட்கள் கிடைக்காதா என ஏங்கிக் கிடந்தனர்.
தார்ப்பாய்க் கூரைகள்
தமிழக முதல்வரும் இதர அமைச்சர்க ளும் வெற்று அறிக்கை மற்றும் புள்ளி விப ரங்கள் மூலமாக உண்மையை மூடி மறைக்கப் பார்த்தனர். கஜா புயலில் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தரப்படும் என்றனர். சாய்ந்த மரங்களுக்கும் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படும் என்றனர். ஆனால், தென்னை மரங்க ளுக்கு மட்டும் ரூ.1100 வழங்கப்பட்டது. அது வும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிக ளுக்கும் வழங்கப்படவில்லை. புயலில் சாய்ந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம் பங்கள் ஒரு இரண்டு மாதங்களுக்குப் பிறகே சரி செய்யப்பட்டன. எனினும், அரசு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், புயல் பாதித்து ஒரு ஆண்டு ஆகியும் மக்கள் தங்களின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை. அரசு அளித்த எந்த வாக்குறுதி யும் நிறைவேற்றப்படவில்லை. இழந்த வாழ் வாதாரத்தை மீட்க முடியவில்லை. பொரு ளாதாரத்தை இழந்து மேலும், மேலும் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அரசு அறி வித்தது. ஆனால், இதற்கான சிறப்பு நிதியி லிருந்து ஒரு வீடு கூட கட்டிக் கொடுத்ததாக தெரியவில்லை. புயலில் தன்னார்வ அமைப்பு கள் கொடுத்த தார்ப்பாய்களே இன்னமும் பல வீடுகளுக்கு கூரைகளாக உள்ளன.
அமலாகாத மத்திய, மாநில அமைச்சர்களின் அறிவிப்புகள்
புயல் பாதிப்பின் போது நெடுவாசலுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவக் கப்பல் மூலம் தென்னங் கன்றுகளைக் கொண் டுவந்து தருவதாக உறுதியளித்தார். இதுவரை ஒரு தென்னங் கன்று கூட அவரால் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் 3.5 லட்சம் தென்னங் கன்றுகளை இலவசமாக வழங்குவதாகக் கூறியது. இது வரை 50 ஆயிரம் கன்று களைக் கூட வழங்கவில்லை. ஆலங்குடி தாலுகா அரையப்பட்டி கிரா மத்தில் புயலில் அறுந்து கிடந்த மின் கம்பிகள் வழியே மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும் பங்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்தபடி நிவாரணத் தொகை தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக அமைச்சர் விஜயபாஸ்கரும், அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.கணேஷுசும் உத்தரவாதம் அளித்த னர். அதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதே போன்று, காயம் அடைந்த யாருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.
புயலுக்குப் பிறகு விவசாயம் முழுமை யாக பாதிக்கப்பட்டதால் அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைத்த வேலை வாய்ப்புகள் பறிபோய் விட்டன. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாததால் கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளனர். சேதம் அடைந்த படகுகளைப் பற்றி அரசு கண்டு கொள்ளவே இல்லை. புயலுக்குப் பிறகு மறுவாழ்வுப் பணிகளை அரசு மேற் கொள்ளாததால் அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். புயல் பாதித்து ஒரு ஆண்டு ஆகியும் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிப்பது ஒரு ஜனநாயக அரசுக்கு அழ கல்ல. இனிமேலாவது அக்கறை செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கட்சியின் சார்பில் மீண்டும் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை வரும். இவ்வாது கவிவர்மன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.