சென்னை,ஜன.28- சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவல கத்தில் துறைரீதியான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 3 பேருக்கு கருணை அடிப்படை யில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், சேலம் தலைவாசலில் அமையும் பிரம்மாண்ட கால்நடைப் பூங்கா வுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். சேலத்தில் 9ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட கால்கோள் விழாவை தொடர்ந்து 2 நாட்களுக்கு கால்நடைகளுக் கான சிறப்பு திருவிழா நடைபெற வுள்ளது என்று தெரிவித்தார்.