tamilnadu

img

‘ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு இளைஞர்களின் கனவை இருளில் மூழ்கடிக்கும்’

மதுரை, மே. 13- தமிழக அரசு ஓய்வூதிய வயதை ஓராண்டு  உயர்த்தியதை கண்டித்தும்  விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற  சிறுமி ஆளும் கட்சியினரால் படு கொலை செய்யப்பட்டதைக் ௧ண்டி த்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுரையில் பத்து இடங்களில்ல வயிற்றில் ஈரத்துணி கட்டி யும், முக்காடு அணிந்தும், பட்டை நாமம் போட்டும், சங்கு ஊதியும்  நூதன முறையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

கிரம்மர்புரம், மதுரை வேலை வாய்ப்பு அலுவலகம், ஜெய்ஹிந்த் புரம், பெத்தானியாபுரம், செல்லூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்து. மாநிலச் செயலாளர் எஸ்.  பாலா, மாவட்டத் தலைவர் பி. கோபி நாத், செயலாளர் டி. செல்வராஜ், பொரு ளாளர் ஜெ. பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் ஏ. பாவேல் சிந்தன்,    ஜெய்ஹிந்த்புரம்  பகுதிக்குழு துணைத் தலைவர் வெங்கடேஷ்  செயலாளர் குரோணி செந்தில், பொருளாளர் சத்யா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு முகம், மேலப்பொன்னகரம் பகுதி குழுத் தலைவர் அசத், செயலாளர் நவீன், பொருளளார் சிந்துமோகன், மயில் ராஜ்,  பெத்தானியாபுரம் பகுதிகுழு தலை வர் ஸ்டீபன், செயலாளர் செந்தில், பொருளாளர் ஜான் மைக்கால் ஆகி யோர் கலந்து கொண்டனர், புதூர்- அண்ணா பகுதிக்குழு சார்பில்  செயலாளர் சரவணன், மீனாம்பாள் புரம் துணைத்தலைவர் பிரசாந்த், செல்லூர் துணைத்தலைவர் இளைய ராஜா, முனிச்சாலை பகுதிக்குழு பகுதிக்குழுத் தலைவர் பாண்டி, செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் எஸ். பாலா “அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயதை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளது லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை  இருளில் மூழ்கடிக்கும் செயலாக உள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள முடிவு இளைஞர்களுக்கான நீதியை தட்டி பறிப்பதாகும்.   தமிழக அரசு  எடுத்துள்ள இந்த முடிவை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஓய்யவு வயது நீட்டிப்பு சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால்  அந்த சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

விருதுநகர்

விருதுநகர் பாத்திமாநகரில் நடை பெற்ற போராட்டத்திற்கு நகர் பொரு ளாளர் ஆனந்த் தலைமை வகித்தாகர். நகர்க்குழு உறுப்பினர் மணிகண்டன்,  மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், டேனியல், சத்யா, ஜீவா, கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர்.