tamilnadu

img

கொரோனா நிவாரண நிதியை வங்கியில் செலுத்தலாம்

சென்னை, ஏப்.9- அவசரகால சூழ்நிலை நிவாரண நிதி’ எனப்படும் பி.எம் கேர்ஸ்  நிதிக்கு மக்கள் வழங்கும் நன்கொடையை பெறுவதற்கான அங்கீகாரத்தை  பெற்றிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில்  கணக்கு வைத்திருப்பவர்கள் இவ்வங்கி வழங்கி வரும் இண்டர்நெட்  பேங்கிங், மற்றும் ஆர்டிஜிஎஸ், என்.இ.எஃப்.டி  உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல்  தொழில்நுட்ப வழிமுறைகள் மூலமாக, தனிநபர்கள் மற்றும் பெருநிறு வனங்கள் ‘பி.எம் கேர்ஸ் ஃபண்ட்’  கணக்கில் தங்களது நன்கொடையை  எளிய முறையில் அளிக்கலாம் என்றும் இதற்கு வருமான வரியில் இருந்து  விலக்கு உள்ளது என்றும் வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.