tamilnadu

img

3வது நபர் குணமடைந்தார்

சென்னை, மார்ச் 28- கொரோனா தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமை யாக குணமடைந்து வீடு திரும்பினார். இதனை  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அயர்லாந்தில் இருந்து திரும்பிய அந்த  நபருக்கு சிகிச்சைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளிலும், நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 14 நாட்களுக்கு அவர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.