tamilnadu

img

தஞ்சாவூர் : 589 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும்.... விதொச மாநிலத் தலைவர் ஏ.லாசர் வலியுறுத்தல்....

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. 

பேரவையில், அனைவருக்கும் 100 நாள் வேலை பாரபட்சமின்றி வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சியில் 100 நாள் வேலை தொடங்கிட வழிவகை செய்ய வேண்டும். குடிமனை பட்டா  முதியோர் உதவித்தொகை தகுதி உள்ளவர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பேரவையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் லாசர் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் தற்போது 100 நாள் வேலை திட்ட பணிகள் சமீபத்தில் வரவரக் குறைந்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதுமே அந்த திட்டத்தை முடக்குவதற்கு மோடி அரசு முயற்சி செய்கிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நாடு தழுவிய போராட்டத்தின் மூலமாக அதை தக்க வைத்தது.கொரோனா காலத்தில் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை தான் இன்றைக்கு வேலையும் வருமானத்தை கிடைக்கக் கூடிய ஒரே வழியாக இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதை நாடு முழுவதும் அமல்படுத்த நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமீபத்தில் 100 நாள் வேலை சுருங்கிக் கொண்டே இருக்கிறது. பேரூராட்சி பகுதிகளில் இந்த வேலையை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். உள்ளதும் போச்சு நொள்ள கண்ணு என்று சுருக்கி கிட்டே வராங்க 256 சம்பளம் தரணும் கையில காசு இல்லாததால் சம்பளம் ரூபாய் 60, 70 தருவேன் சொல்லி குறைச்சுட்டு வராங்க. இது சட்டவிரோதமான காரியம். இதற்கென்று நிதி நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஏறத்தாழ 9000 கோடி ஒதுக்கியாச்சு பணத்தை கொடுப்பதற்கு அதிகாரிகள் மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். வேலைகள் தருவதில்லை. எனவே சட்டத்துக்கு விரோதமாக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் முதல் வாரத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 26-ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் பங்கேற்று மக்களை திரட்டி வலிமைமிக்க போராட்டம் நடத்தப்படும் என லாசர் தெரிவித்தார். பேரவையில், விதொச மாநில பொறுப்பாளர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, ஜேசுதாஸ், ஜீவபாரதி, பழனிவேல் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.