tamilnadu

img

தலித்துகள் தாக்கப்படும் மாநிலமாக மாறிய தமிழகம்

கே.பாலகிருஷ்ணன் வேதனை

விழுப்புரம், பிப்.29- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கவரை கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் சக்திவேல் ஆதிக்க சாதிவெறியர்களால் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித் தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செய லாளர் கே .சாமுவேல் ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ராதாகிருஷ்ணன், ஏ.கோதண் டம், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், எஸ்.வேல்மாறன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, சே.அறிவழகன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்,“தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, தலித் இளைஞர்கள் படு கொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கி றது” என்றார். ஒரு பக்கம் ஆணவக்கொலை என்ற பெயரில் கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் தலித் மக்கள் மீதான  தாக்குதலும், கொலைகளும் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழகம் மாறி வருவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சாதிவெறிக்கு துணையா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளே வீடு புகுந்து தலித் இளைஞர்களை தாக்கி யுள்ளனர். விழுப்புரத்தில் சாதி வெறி யர்களால் சக்திவேல் என்கிற தலித் வாலிபர் கை, கால்களைக் கட்டி வைத்து அடித்து படுகொலை செய்யப்பட்டுள் ளார். ஆனால், சிலரை மட்டும் கைது செய்த காவல்துறையினர், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர் களை கைது செய்யமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி னார்.

எஸ்.ஐ. மீது நடவடிக்கை

சக்திவேலின் சகோதரனையும், தந்தையும் காவல்துறை உதவி ஆய்வா ளர் வினோத்ராஜ்  தாக்கியுள்ளார். எனவே, இந்தப் படுகொலையில் அந்த எஸ்.ஐக்கும் சம்பந்தம் உள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர், கொலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் கொலை வழக்கு மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும், கொலை யில் நேரடியாக தொடர்புடைய எஸ்.ஐ. வினோத் ராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். தமிழக முத லமைச்சருக்கு என்றும் பாலகிருஷ் ணன் வேண்டுகோள் விடுத்தார்.