தர்மபுரி, ஆக.1- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி யில் அமைந்துள்ள தியாகி சுப்பிர மணிய சிவா மணிமண்டபம் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அமைப்புகளின் கூடார மாக மாறி வருகிறது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த நினை வுச்சின்னம் பராமரிக்கப்பட்டு வரு கிறது. சாதி மத வேறுபாடுகள் அற்ற சமத்துவ கோயிலாக பாரதமாதா வை வழிபட வேண்டும் என்று வலி யுறுத்திய விடுதலைப்போராட்ட தியாக சீலர் சுப்பிரமணிய சிவாவின் மணி மண்டபம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் கூடாரமாக மாறி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிவா மணி மண் டபம் பார்வையாளர்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டு தடை செய்யப் பட்டுள்ளது.இருந்தபோதிலும் தடை யை மீறி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் செயற்பாட்டா ளர் முனுசாமி என்பவர், மேலும் சில ஆர்எஸ்எஸ் இளைஞர்கள், இந்துத் துவா அமைப்புகளைச் சேர்ந்த செயற் பாட்டாளர்களை வைத்து இளைஞர் களுக்கு சிலம்பு பயிற்சி அளிக்கி றோம் என்ற பெயரில் மத அமைப்பு கள் தங்கள் வகுப்பு வாத நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில பாரதிய சன்யாசி சங்கம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் ஆதரவு சாமியார்கள் அமைப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் பஜனைப் பாடல்கள் பாடி சுண்டல் பிரசாதம் வழங்கும் பூஜைகள் நடத்தியது. இதனை கண்டித்து மத அமைப்பு களின் செயல்பாடுகள் மணிமண்டபத் தில் நடத்தப்படக் கூடாது என்று தேச பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சி யினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து மத அமைப்பு களின் நடவடிக்கைகள் மணிமண்ட பத்தில் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. தற்பொழுது தமிழகத்தில் நில வும் இந்துத்துவ மதவெறி அரசியல் நடவடிக்கைகளாக வெளிப்பட்டு வரும் பெரியார் சிலை உடைப்பு, அறி ஞர் அண்ணா எம்ஜிஆர் ஆகியோர் சிலைகளுக்கு காவி துண்டு அணி வித்து காவி சாயம் பூசுவது போன்ற நடவடிக்கைகளில் இந்துமத வெறி சக்திகள் ஈடுபட்டுவருகின்றன. மதவேற்றுமைகளை களைந்து இந்திய நாட்டு மக்கள் அனைவரை யும் ஒற்றுமைப்படுத்த பாடுபட்ட விடு தலைப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபத்தையும் தங்களுடைய நடவடிக்கைக் களமாக ஆர்எஸ்எஸ் மாற்றி வருகிறது. இதனை கண்டும் காணாமல் இருந்து தமிழக அரசு, மதவெறி சக்திகளை கட்டுப்படுத்த தவறி வருகிறது. விடு தலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் மணி மண்டபத்தை மத வெறி அமைப்புகளின் புகலிடமாக மாறுவதை தடுக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சின்னசாமி வலி யுறுத்தி உள்ளார்.