சென்னை, ஆக. 3- அரசு தொழிற் பயிற்சி நிலையங்க ளில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்க ளில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு, அதே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2019ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனி யார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகிய வற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37097 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங் கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலை யங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதற்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது. இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7840 இடங்களும் தனி யார் தொழிற்பயற்சி நிலையங்களில் 5888 இடங்களும் காலியாக உள்ளன.இந்த காலியிடங்களை நிரப்பிட ஆக.2 முதல் ஆக. 20 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படு கின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்க ளில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலி யிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட வில்லை எனில் அந்த இடங்களை மாற்று இனத்தவரைக்கொண்ட நிரப்பிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப் பிக்கும் அனைவருக்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இடம் கிடைத்திட வாய்ப்புள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன் படுத்தி தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சேர்ந்திட www. skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படு கிறது.தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப் பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.08.2019.