tamilnadu

சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி மறியல்

சேலம், ஜூலை 30- சேலம் மாநகர் நான்கு ரோடு அருகே உள்ள அரிசிபா ளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை மூடப்படாததால் சாக்கடை கழிவு நீருடன், மழை நீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அரிசிபாளையம் பிரதான சாலையிலிருந்து பத்துக் கும் மேற்பட்ட தெருக்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக் கப்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்கு செல்ல பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக் காததால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும்  மேற்பட்டோர் அரிசிபாளையம் பிரதான சாலையில் அமர்ந்து  திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட  பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவில் முடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறிய லில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.