உலமாக்கள் தலைவர் காஜாமொய்தீன் பாகவி பேசுகையில்,இனத்தால், மொழியால், மதத்தால், கலாச்சாரத்தால் நாம் வேறுபட்டவர்களாக இருக்கலாம். எட்டு இனங்கள் உள்ளன. 9 பெரிய சமயங்கள் உள்ளன. 22 மொழிகள் உள்ளன. 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். உலகில் நீண்ட பரப்பளவைக் கொண்ட 7ஆவது நாடு இந்தியா. 3,300 கி.மீ. பாஸ்போர்ட் விசா இல்லாமல் விசாலமாக நாட்டில் சென்று வரமுடியும். நிலப்பரப்பிலே பரந்து விரிந்த, இயற்கை வளங்களை ஏராளமாகக் கொண்ட இந்த நாட்டில் 800 ஆண்டுக்காலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், கிறித்துவர்கள், டச்சுகீசியர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரிட்டீஷார் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆட்சி செய்தவர்கள் ஆட்சியில் கவனம் செலுத்தினார்களே தவிர சமயத்தை மாற்றுவதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
இஸ்லாமியர்கள் மதபாகுபாடு காட்டியதில்லை. குஜராத்திலே பூகம்பம், சென்னையிலே பெருவெள்ளம், கேரளத்திலே பெரு வெள்ளம் ஏற்பட்ட போது அனைவரும் சகோதரர்கள் இந்தியர்கள் என உதவிக் கரம் நீட்டியவர்கள் இஸ்லாமியர்கள். குடியுரிமையைக் கடுமையாக அமல்படுத்திய நாடுகளெல்லாம் சின்னபின்னமாகச் சிதறிப் போனதுதான் வரலாறு. சென்னை சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்டு நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. ஆனால் தில்லி போராட்டத்தில் தனிநபர்கள் துப்பாக்கியுடன் வந்து போராட்டக்காரர்களைத் தாக்குகிறார்கள், கொலை செய்கிறார்கள். அங்கே அரசு பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது. மதச்சார்பற்ற பன்முகத்தன்மை கொண்ட தேசம் இந்தியா என்ற பெருமையைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களை முறியடிப்போம், தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தொகுப்பு: செ.கவாஸ்கர், எஸ்.ராமு, படங்கள்: ம.மீ.ஜாபர் உசேன்