tamilnadu

img

மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன மாநாடு

ஏப்ரல் மாதம் குண்டூரில்

சென்னை,  ஜன. 30 - அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின், முதல் மாநாடு ஏப்ரல் முதல் வாரத்தில் ஆந்திர மாநிலம் குண்டூ ரில் நடைபெற உள்ளது. சம்மேளனத்தின் தற்காலி கக்குழு (அடாக்கமிட்டி) கூட்டம் செவ்வாயன்று (ஜன.28) சென்  னையில் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர்  சங்கத்தின் தலைவரும், சம்மேள னத்தின் ஒருங்கிணைப்பாளருமான நெ.இல.சீதரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 13 மாநி லங்களில் உள்ள ஓய்வூதியர் சங் கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அகில இந்திய மாநில  அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர்  சுரேஷ்லம்பா, பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஜெயச்சந்தி ரன், செயலாளர் எம்.நாதன், நிர்வா கிகள் இளமாறன், குப்பன் உள்ளிட்  டோரும் கலந்து கொண்டு பேசினர். இந்தக்கூட்டத்தில் அகில இந்திய சம்மேளனத்திற்கான அமைப்பு விதிகளை உருவாக்கி யுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் நெ.இல.சீதரன் கூறினார்.
 

;