tamilnadu

img

திருச்சியில் அதிநவீன சமையல் எரிவாயு சேமிப்பு டேங்கர்

திருச்சி,ஜூலை 21- திருச்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில், 900 மெட்ரிக்  டன் எரிவாயுவை சேமிக்கும் வகையில் அதிநவீன டேங்கர் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, இனாம் குளத்தூரில் உள்ள  சமையல் எரிவாயு சேமிப்பு தொழிற்சாலை யில் நாள்தோறும் ஆயிரம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவானது, அங்குள்ள டேங்கர்களில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட சமையல் எரிவாயு நாள்தோறும் 34 ஆயிரம் சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இங்கு கூடுதலாக எரிவாயுவை சேமிக்கும் வகையில், மவுண்ட் ஸ்டோரேஜ் வெசல்ஸ் எனப்படும் அதிநவீன  டேங்கர் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த டேங்கர்  அமைக்கப் பட்டுள்ளது. இந்த டேங்கரில் சுமார் 900 மெட்ரிக் டன் எரிவாயு சேமிக்கலாம். விரைவில் இந்த புதிய டேங்கர் பயன் பாட்டுக்கு வரும் என்றும் இதன்மூலம் கூடுதலாக எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.