tamilnadu

img

இஸ்லாமியர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு - நிர்வாகி கைது

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவர் பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட இனை செயலராக உள்ளார்.இந்நிலையில் சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பபியதாக இவர் மீது 439,294பி,153ஏ,504,505(2) உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இவர் சமூக வலைதளங்களில் கொரோனாவை வைரஸ் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், இஸ்லாமியர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டு இருந்ததார். இதனைத்தொடர்ந்து செல்வபுரம் போலிசார் புகாரின் பேரில்  கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.