உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் ஷேர் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து எருமார் பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.