விழுப்புரம், ஜன. 13- விழுப்புரத்தில் திங்களன்று (ஜன.13) நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் “பிட் “ அடித்த போது பிடிபட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை ஒதுக்கீட்டில் 857 பேர் காவல் உதவி ஆய்வா ளர் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதினர். இந்த நிலையில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்ட தேர்வு மையத்தில் காவலர் ஒருவர் பிட் அடித்துத் தேர்வெழுதினார். எழுத்துத் தேர்வை கண்கணித்த டி.எஸ்.பி. ரவீந்தி ரன், அந்த காவலரைப் பிடித்து அதிகாரி களிடம் ஒப்படைத்தார். உடனடியாக ஐ.ஜி. கணேசமூத்தி, எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்து, தேர்வு மையத்தி லிருந்து வெளியேற்றினர்.