tamilnadu

img

லதிகாவுக்கு சஞ்சீவி மூலிகை  -இதுவும் கேரளாவில்!!!!

கொரோனா தொற்று காரணமாக கேரளாவில் முழு அடைப்பு. மக்களுக்கு அவசியமான பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அவசியமான மருந்துக்குகூட அவசர கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது.  அதில் லதிகா என்ற காசர்கோட்டை சார்ந்த பெண்ணுக்கு இருதய நோய்க்கான மருந்து ஒன்று தேவை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் தான் கிடைத்தது. 550 கிலோ மீட்டர். திருவனந்தபுரம் காவல் கண்காணிப்பாளர் ஒரு காவல்துறை வாகனத்தில் மாவட்ட எல்லைவரை அனுப்பி,  19 வாகனத்தில் காசர்கோட்டில் எட்டு மணிநேரத்தில் கொண்டு சேர்த்தார். லதிகாவுக்கு அது சஞ்சீவி மூலிகை போல் உயிர் காத்தது. இப்படி எல்லாம் கேரளாவில் தான் நடக்குமோ?!!